கருவறை
- ஸ்ரீ ராம் குமார்
- Oct 14, 2019
- 1 min read
Updated: Nov 25, 2019

ஒரு குழந்தையைச் சுமப்பதுபோல்
கவிதையைச் சுமந்த
அந்த காலங்கள் -என் வாழ்வில்
அழிக்க முடியா கோலங்கள் .
வேற்று கிரகத்தினைப்
பார்ப்பது போல்
கவிதை உலகை
வியந்து பார்த்துக்கொண்டிருந்தேன்
அவ்வுலகில் வாழ நானும்
ஏங்கிக்கொண்டிருந்தேன் .
அதுவரை சுனையயிருந்த என்
இலக்கிய ஆர்வம்
பாரதியைக் கண்டபின்னர்
புனலானது நானிருப்பதே
கவியுலகமென்று
தெரியவைத்து
கவிதையின்
அடுத்த தலைமுறையில்
நானும் ஒருவன் என்று
புரியவைத்தது ;
என்னுள் கவிதையையும்
பிறக்கவைத்தது .
பின்
உலகம் முழுவதையும்
தமிழால் பார்த்தேன்
அவையனைத்தையும் -என்
சிந்தையில் கவிதையாய்ச்
சேர்த்தேன் .
அந்த காலம்
என் பொற்காலம்
என் கனவினிலும் நனவினிலும்
எங்கேயும் கவிதையையே
சுவாசித்த காலம் .
இப்போது மூச்சினை
அடக்கி பன்னிரண்டாம் வகுப்பெனும்
ஆழ நதியினைக்கடந்து
மூன்றுமாத விடுமுறையில்
மூச்சு வாங்கி
மீண்டும் கவிதையை
சுவாசிக்க ஆரம்பித்துவிட்டேன் .
என் வாழ்கையின் களிப்பில் மட்டுமல்ல கண்ணீரிலும் கூட கவிதையே இருக்கும் , என் உயிர் பிரிந்தாலும் உடல் அழிந்தாலும் உடலின் எஞ்சிய அணுவின் அதிர்வு கூட தமிழென்றே துடிக்கும் .
Comments